×

தென் மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட 2.60 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கனமழை, பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.160 கோடியே 42 லட்சத்து 41 ஆயிரத்து 781 நிவாரணம் வழங்கப்படுகிறது.

மேலும் 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.41 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 680 நிவாரணம் வழங்கிட, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தென் மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட 2.60 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Tirunelveli ,Thoothukudi ,Thenkasi ,Kanyakumari ,Virudhunagar ,Ramanathapuram ,Sivagangai ,Madurai ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...